Wednesday, December 9, 2009

கவிதைகள்

போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்து சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்த பிறந்த நாளில்
இருக்கேனா? செத்தேனா ?
எனத் தெரிய வில்லை

அடுத்த கவிதை தொகுப்பின்
முதல் பிரதி தனக்கே
வேண்டுமென சொன்ன
முப்பது தோழிகளும்
முகவரியை தொலைத்து இருந்தார்கள்
என் மகளை தன் மகனுக்கு
கேட்பேன் எனச் சொன்ன
தோழி ஒருத்தி
அவள் திருமணத்திற்கே என்னை
அழைக்கவில்லை !

இப்படிக்கு
ஹரிஹர சுதன் . ரா.

No comments:

Post a Comment